×

முறையற்ற உறவை தட்டிக்கேட்ட அத்தையை குத்திக் கொன்ற இளைஞர்!

சென்னையில் முறையற்ற உறவை தட்டி கேட்ட அத்தையை குத்தி கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்.இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், புழல் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த இவரது அத்தை குணசுந்தரி, கணேஷின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றி ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் குணசுந்தரியை கணேஷ் குத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணேஷ்
 

சென்னையில் முறையற்ற உறவை தட்டி கேட்ட அத்தையை குத்தி கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்.இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், புழல் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த இவரது அத்தை குணசுந்தரி, கணேஷின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றி ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் குணசுந்தரியை கணேஷ் குத்தியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து கணேஷ் தப்பியோடிய நிலையில், தகவல் அறிந்த கொளத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு, பின்னர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கணேஷ் அதே பகுதியில் உறவுக்காகர பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததால், குணசுந்தரி அதனை கண்டதாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் குணசுந்தரி கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முறையற்ற உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணேஷை தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.