×

மாணவர்களின் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை!

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிராகவும் சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்
 

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னை பல்கலைக் கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிராகவும் சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்குடியுரிமை திருத்தம் சட்ட மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்குவந்த காவல்துறையினர் மாணவர்களை கலைத்தனர். இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை ஏற்கனவே புத்தாண்டு, கிறிஸ்துமஸ் முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.