×

மாணவர்களின் பிறப்புறுப்பில் அடித்து துன்புறுத்தும் தலைமை ஆசிரியர்: தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்!

மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் கோவை சூலூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சூலூர் விமானப் படை தளத்தில் பணியாற்றி வருகிற பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவரின் மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் 11 மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன் இரு மாணவர்களையும் தனி அறைக்கு அழைத்து
 

மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்

கோவை சூலூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சூலூர் விமானப் படை தளத்தில் பணியாற்றி வருகிற   பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவரின் மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் 11 மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன்  இரு மாணவர்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பிறப்புறுப்பில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.  இதனால் மாணவர்கள் வலி பொறுக்காமல் அழுதுள்ளனர். இதுகுறித்து மாலை வீடு திரும்பியதும் தாயிடம் கூற அவர் மாணவர்களைக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து கூறியுள்ள மாணவர்களின் தாய், தலைமை ஆசிரியர் மாணவர்களிடம்  தவறாக நடந்துகொள்கிறார் என்று ஏற்கனவே  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.