×

மழைநீர் வடிகால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு : சென்னையில் பரபரப்பு !

சாலையில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால் எங்கே மழை நீர் வடிகால்வாய் உள்ளது என்று அறிய முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சாலையில் நீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால் எங்கே மழை நீர் வடிகால்வாய் உள்ளது என்று அறிய முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்பேட்டையை சேர்ந்த ஷேக் அலி என்பவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
 

சாலையில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால் எங்கே மழை நீர் வடிகால்வாய் உள்ளது என்று அறிய முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சாலையில் நீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால் எங்கே மழை நீர் வடிகால்வாய் உள்ளது என்று அறிய முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்பேட்டையை சேர்ந்த ஷேக் அலி என்பவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து மழை நீரில் மூழ்கியுள்ளார். 

அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்கத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர், அங்கே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்க 2 மணி நேரமாக முயற்சி செய்துள்ளனர். ஆனால், நீர் அதிகமாக இருந்ததால் அவரை உடனே வெளியேற்ற முடியவில்லை. அதனையடுத்து, நீரை வெளியேற்றுவதற்காக இரண்டு தண்ணீர் உறிஞ்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு வாகனம் பழுதடைந்ததால் தீயணைப்புத் துறையினரே பக்கெட் மூலம் நீரை வெளியேற்றியுள்ளனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஷேக் அலியின் உடலைச் சடலமாக மீட்டுள்ளனர். 

ஷேக் அலியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்த காவல்துறையினர் , அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.