மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துரைமுருகன்
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்.
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்.
திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசும்பொழுதெல்லாம் உணர்ச்சி வசப்படுபவர். அந்த வகையில் நேற்று சட்டசபையில் கருணாநிதி குறித்து அவர் பேசுகையில் தேம்பி தேம்பி அழுதார். அவரது பேச்சை கேட்ட அனைவரும் கருணாநிதி மீது துரைமுருகன் எவ்வளவு அபிப்ராயம் கொண்டிருக்கிறார் என நெகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை சீரானதால் அவர் வீடு திரும்பினார்.