×

மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையே அரசு செயல்படுத்தி வருகிறது – முதல்வர் பழனிசாமி

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் செய்தியாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர் “தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தினால் கொரோனா இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முன் களப்பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் சிகிச்சை பெற்று விரைவில் நலமுடன் வர வேண்டும். அதேபோல தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று
 

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் செய்தியாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தினால் கொரோனா இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முன் களப்பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் சிகிச்சை பெற்று விரைவில் நலமுடன் வர வேண்டும். அதேபோல தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். வெளியில் சென்றால் நிச்சயம் முகக்கவசம் அணிய வேண்டும், கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இயல்பு நிலை நிச்சயம் திரும்ப முடியும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையே அரசு செயல்படுத்தி வருகிறது” எனக் கூறினார்.