×

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கடந்த 15ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததையடுத்து அந்தப் பெண்ணின் ரத்த
 

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கடந்த 15ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததையடுத்து அந்தப் பெண்ணின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள், அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் என 88 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.