×

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். செஞ்சி: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளியான சங்கருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் மனைவி நேற்று
 

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

செஞ்சி: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளியான சங்கருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு  வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் சங்கரின் மனைவி நேற்று முன்தினம் காலையில் தனது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு கூலி வேலைக்குச் சென்று விட்டார். அப்போது தனது வீட்டுக்கு சென்ற சங்கர் தனது இரண்டாவது மகளை கடைக்கு அனுப்பி விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சங்கரின் மகள் தனது தாயிடம்  நடந்ததை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்,  இதுகுறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்துள்ளனர். பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.