பெண் வாடிக்கையாளரிடம் ஆபாசமாக பேச்சு: வங்கி மேலாளரை அடித்து இழுத்து சென்று போலீசில் ஒப்படைத்த கும்பல்; வைரல் வீடியோ!
ஆந்திரா வங்கிக்கு மகளிர் சுய உதவி குழவின் கடன் தொடர்பாக ஆந்திரா வங்கிக்கு சென்றதாக தெரிகிறது.
பெண்ணிடம் தவறாக பேசியதாக வங்கி மேலாளர் மீது, பாரதிய இந்து பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகேயுள்ள நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் பாரதிய இந்து பரிவார் அமைப்பில் மாநில செய்தி தொடர்பாளராக உள்ளார். இவரது மனைவி கலா அதே அப்பகுதியில் உள்ள ஆந்திரா வங்கிக்கு மகளிர் சுய உதவி குழவின் கடன் தொடர்பாக ஆந்திரா வங்கிக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது வங்கி மேலாளர் இளங்கோவன் கலாவை ஆபாசமாகத் திட்டியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அவரது கணவர் மற்றும் பாரதிய இந்து பரிவார் அமைப்பினர் ஆந்திரா வங்கிக்குள் புகுந்து இளங்கோவனை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை சாலையில் தரதரவென இழுத்து சென்று சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.