×

பிறந்தநாள் கொண்டாடச் சென்ற நண்பர்கள்.. நேருக்கு நேர் மோதிய பைக் : சம்பவ இடத்திலேயே இருவர் பலி!

நேற்று முன் தினம் கார்த்தியின் சகோதரருக்குப் பிறந்த நாள் என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர் ஆனந்தகுமார் (23) உடன் மீனாட்சி புரத்துக்குச் சென்றுள்ளார். கோவை மாவட்டம் மலையாண்டிப் பட்டணம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (23). நேற்று முன் தினம் கார்த்தியின் சகோதரருக்குப் பிறந்த நாள் என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர் ஆனந்தகுமார் (23) உடன் மீனாட்சி புரத்துக்குச் சென்றுள்ளார். கொண்டாட்டம் முடிந்ததும் இவர்கள் இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த
 

நேற்று முன் தினம் கார்த்தியின் சகோதரருக்குப் பிறந்த நாள் என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர் ஆனந்தகுமார் (23) உடன் மீனாட்சி புரத்துக்குச் சென்றுள்ளார்.

கோவை மாவட்டம் மலையாண்டிப் பட்டணம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (23). நேற்று முன் தினம் கார்த்தியின் சகோதரருக்குப் பிறந்த நாள் என்பதால் அதனைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர் ஆனந்தகுமார் (23) உடன் மீனாட்சி புரத்துக்குச் சென்றுள்ளார். கொண்டாட்டம் முடிந்ததும் இவர்கள் இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வளந்தாயமரம் பகுதி அருகே எதிரே வந்த பைக் ஒன்று இவர்கள் பைக் மீது மோதியுள்ளது. எதிரே வந்த பைக்கில் போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்மணி (18), கார்த்திகேயன்(17) ஆகிய இரண்டு பேரும் வந்து கொண்டிருந்துள்ளனர். 

இரண்டு பைக்கும் வேகமாகச் சென்று மோதிக் கொண்டதால், பைக்கில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் ஆனந்தகுமாருக்கும்  கார்த்திகேயனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த  கார்த்தி மற்றும் அசோக் மணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.