×

பிரதமர் மோடிக்கு ‘கோயில்’ கட்டி கும்பிடும் தமிழக விவசாயி !

இவர் சிறிய வயதிலிருந்தே நரேந்திர மோடிக்குத் தீவிர ரசிகராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்குத் திருமணம் ஆகி 4 பிள்ளைகள் உள்ளனர். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் சங்கர், எரகுடி விவசாயச் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் சிறிய வயதிலிருந்தே நரேந்திர மோடிக்குத் தீவிர ரசிகராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்குக் கோயில்
 

இவர் சிறிய வயதிலிருந்தே நரேந்திர மோடிக்குத் தீவிர ரசிகராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்குத் திருமணம் ஆகி 4 பிள்ளைகள் உள்ளனர். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் சங்கர், எரகுடி விவசாயச் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் சிறிய வயதிலிருந்தே நரேந்திர மோடிக்குத் தீவிர ரசிகராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டுள்ளார். அவர் நினைத்த போது அவரிடம் போதிய பண வசதி இல்லாததால், அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் இருந்துள்ளது.

 

அதன் பின்னர், கடந்த சில மாதங்களாக விவசாயத்தில் நல்ல விளைச்சல் இருப்பதால் தனது தோட்டத்திலேயே பிரதமர் மோடிக்கு சிலை வைத்து கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு பா.ஜ.க தலைவர்கள் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசையாம்.

இவர் தினமும் கோயிலில் உள்ள மோடி சிலைக்குப் பாலபிஷேகம் செய்து, தீப ஆராதனை காட்டி அவரது பிள்ளைகளுடன் வழிபாடு நடத்தி வருகிறார். இது குறித்துப் பேசிய சங்கர், பிரதமர் மோடி கட்சி நடத்துவதையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தான் இந்த கோவிலைக் கட்டினேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்காக அவர் கட்டிய கோயிலின் புகைப் படங்கள் தற்போது  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.