×

பிரதமரிடம் என்ன பேசினேன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

பிரதமருடனான சந்திப்பின் போது என்னென்ன பேசினேன் என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். டெல்லி: பிரதமருடனான சந்திப்பின் போது என்னென்ன பேசினேன் என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்து கோரிக்கை
 

பிரதமருடனான சந்திப்பின் போது என்னென்ன பேசினேன் என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

டெல்லி: பிரதமருடனான சந்திப்பின் போது என்னென்ன பேசினேன் என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்து கோரிக்கை வைத்தேன். அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையும், ராமநாதபுரத்தில் மருத்துவக்ககல்லூரியும் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மேகதாது அணைக்கு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்திருக்கிறார் என்றார்.