×

பிரசவ வலிவால் துடிதுடித்த பெண் : “வயல் வெளியில்” பிரசவம் பார்த்த பெண்கள்.. நெகிழ்ச்சி சம்பவம் !

செல்லும் வழியிலேயே சோனியாவிற்குப் பிரசவ வலி அதிகரித்து, வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியில் சிலம்பரசன்-சோனியா என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். சோனியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு நேற்று பிரசவ வலி வந்துள்ளது. இதனால், சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சோனியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே சோனியாவிற்குப் பிரசவ வலி அதிகரித்து, வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். அதன் பின்னர், அந்த ஆம்புலன்ஸ் செல்லும் வழியிலேயே
 

செல்லும் வழியிலேயே சோனியாவிற்குப் பிரசவ வலி அதிகரித்து, வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூரை அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியில் சிலம்பரசன்-சோனியா என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். சோனியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு நேற்று பிரசவ வலி வந்துள்ளது. இதனால், சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சோனியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே சோனியாவிற்குப் பிரசவ வலி அதிகரித்து, வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். அதன் பின்னர், அந்த ஆம்புலன்ஸ் செல்லும் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட இடத்தில் வயல் வெளி இருந்துள்ளது. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள், சோனியா பிரசவ வலியால் துடிப்பதை அறிந்து சோனியாவை ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கி அவரைச் சுற்றிலும் அரனாக புடவைகளைப் பிடித்து வயல் வெளியிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். 

அதில் தாயையும் சேயையும் அந்த பெண்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். சோனியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சோனியாவும் அவரது குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர். ஆம்புலன்ஸில் சென்ற பெண் வலியால் துடிதுடித்துக் கொண்டிருப்பதை அறிந்து வயல் வெளியில் அந்த பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.