×

பாலியல் தொழில் நடத்திய 13 பேர்.. அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, பாலியல் தொழில் செய்பவர்களைக் கைது செய்யச் சிறப்புத் தனிப்படை அமைத்த போலீசார் சந்தேகத்திற்கு உள்ளான இடங்களில், மறைமுகமாகக் கண்காணித்து வந்தனர். அந்த தனிப்படையில் திருக்கோகர்ணம் போலீசாரும் இருந்தனர். இதனையடுத்து திருக்கோகர்ணம்
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, பாலியல் தொழில் செய்பவர்களைக் கைது செய்யச் சிறப்புத் தனிப்படை அமைத்த போலீசார் சந்தேகத்திற்கு உள்ளான இடங்களில், மறைமுகமாகக் கண்காணித்து வந்தனர். அந்த தனிப்படையில் திருக்கோகர்ணம் போலீசாரும் இருந்தனர். 

இதனையடுத்து  திருக்கோகர்ணம் போலீசார் கொடுத்த தகவலை வைத்து,  திருக்கோகர்ணம் பகுதிக்கு உட்பட்ட அபிராமி நகர், பெரியார் நக,ர் ராஜகோபாலபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் பாலியல் தொழில் செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 7 இடைத்தரகர்கள் மற்றும் 5 பெண்களைக் கைது செய்துள்ளனர். மேலும்,  அவர்கள் இந்த தொழிலுக்காகப் பயன்படுத்திய கார், ஆட்டோ மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இது குறித்துப் பேசிய காவல் துறையினர், ரகசியத் தகவலை வைத்துக் கண்காணித்து வந்தோம். எஸ்.பியின் உத்தரவின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டு அவர்களைக் கைது செய்தோம். இன்னும் பல இடங்களில் சோதனை தொடர உள்ளது. ஏதாவது இடத்தில் பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுங்கள்” என்று கூறினார்.