×

நள்ளிரவு முதலே கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதலே கனமழை பெய்தது. தமிழகம் முழுவதும் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில்
 

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதலே  கனமழை பெய்தது.

தமிழகம் முழுவதும் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென்  தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாளை முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவு முதலே  கனமழை பெய்தது.

இந்நிலையில்  கனமழை காரணமாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு நடைபெறும் நாள் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.