நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மாணவன்.. கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்!
தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்து மாணவர்கள் 10 பேர் சுற்றுலா செல்லலாம் என்று பிளான் போட்டு, மாமல்லபுரத்துக்குச் சென்றுள்ளன
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்து மாணவர்கள் 10 பேர் சுற்றுலா செல்லலாம் என்று பிளான் போட்டு, மாமல்லபுரத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு இருக்கும் சிற்பக் கலைகள், உருண்டை பாறை என அனைத்தையும் சுற்றி பார்த்து விட்டு பின்னர், அங்கிருக்கும் கடற்கரையில் குளிக்கச் சென்றுள்ளனர். எல்லா மாணவர்களும் கடலில் குடித்து விளையாடத் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்வரராவ் (20) என்ற மாணவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை சைலேஷை அடித்துக் கொண்டு சென்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை காப்பாற்றுமாறு அங்கிருந்த மீனவர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் அவரை தேடி கடலுக்குச் சென்றுள்ளனர். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் கிடைக்காததால், மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். அதன் பின்னர் 3 மணி நேரத்துக்குப் பிறகு அந்த மாணவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், சைலேஷ்வரராவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.