தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை…!
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் சில நாட்கள் மழை பெய்த நிலையில் மீண்டும் வறண்ட வானிலையே நிலவியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.