×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழக காவல்துறை மீது சிபிஐ வழக்குப்பதிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தமிழக
 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

தொடர்ந்து, தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை சிபசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ போலீசாருக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், 4 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், வெடிபொருள் தடுப்பு சட்டப் பிரிவு, வன்முறையில் ஈடுபடுதல், ஆபத்தான ஆயுதங்கள் மூலம் காயப்படுத்துவது, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி வீட்டுக்குள் புகுவது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ்.அர்ஜூணன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, அவர்கள் மீது குற்றச்சதி, சட்டத்தை மதிக்காத அரசு ஊழியர்கள், வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.