×

துப்பாக்கியுடன் வந்த பாமகவினர் மீது வழக்குப்பதிவு!

மேட்டூர் அருகே மேச்சேரியில் கடந்த 30ஆம் தேதி வீரப்பன் வேடமிட்டு துப்பாக்கியுடன் வந்த பாமகவினர் மூவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பாமகவினர் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டம் மேச்சேரியில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடுகோரி, கடந்த 30 ஆம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சிலர்
 

மேட்டூர் அருகே மேச்சேரியில் கடந்த 30ஆம் தேதி வீரப்பன் வேடமிட்டு துப்பாக்கியுடன் வந்த பாமகவினர் மூவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பாமகவினர் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டம் மேச்சேரியில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடுகோரி, கடந்த 30 ஆம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் வீரப்பனைப்போல வேடமிட்டு மரக்கட்டையில் செய்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இச்செயல் பொதுமக்களையும், அரசு அலுவலர்களையும் அச்சமூட்டுவதாக இருந்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ், மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.