×

துப்பாக்கி முணையில் மாமியார் கடத்தல்… கணவர் மாயம்… சொத்துக்காக ரவுடியான மருமகள்!

தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்ற பத்மினியை கடந்த 18ம் தேதி சொந்த மகனின் மனைவி மேனகா துப்பாக்கி காட்டி கடத்திச் சென்றுள்ளார். சென்னை படப்பையைச் சேர்ந்தவர் பத்மினி. இவருக்கு அந்த பகுதியில் பல ஏக்கர் நிலம், 10க்கும் மேற்பட்ட கடைகள் வைத்துள்ளார். தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்ற பத்மினியை கடந்த 18ம் தேதி சொந்த மகனின் மனைவி மேனகா துப்பாக்கி காட்டி கடத்திச் சென்றுள்ளார். மூதாட்டி ஒருவர் துப்பாக்கி முணையில் காரில் ஏற்றப்படும் நிகழ்வைக் கண்ட பலரும்
 

தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்ற பத்மினியை கடந்த 18ம் தேதி சொந்த மகனின் மனைவி மேனகா துப்பாக்கி காட்டி கடத்திச் சென்றுள்ளார்.

சென்னை படப்பையைச் சேர்ந்தவர் பத்மினி. இவருக்கு அந்த பகுதியில் பல ஏக்கர் நிலம், 10க்கும் மேற்பட்ட கடைகள் வைத்துள்ளார். தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்ற பத்மினியை கடந்த 18ம் தேதி சொந்த மகனின் மனைவி மேனகா துப்பாக்கி காட்டி கடத்திச் சென்றுள்ளார். மூதாட்டி ஒருவர் துப்பாக்கி முணையில் காரில் ஏற்றப்படும் நிகழ்வைக் கண்ட பலரும் போலீசுக்கு புகார் செய்தனர்.

மேனகாவின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்த போலீசார் அயனாவரத்திலேயே அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரை விசாரணை நடத்தியதில் பெரும்பாக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் பத்மினி அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இருட்டு அறையில், கட்டிப்போடப்பட்ட நிலையிலிருந்த பத்மினியை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, “மேனகாவும் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணாவும் தன்னை கடத்தி, தன் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் எழுதித்தரும்படி சித்ரவதை செய்தனர்” என்றார்.

தொடர்ந்து மேனகாவிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியானது. பத்மினியின் கணவர் சுப்புராயன் பெயரில் பல ஏக்கர் நிலம் இருந்ததாகவும் சொத்து பிரிவினையில் பிரச்னை ஏற்பட்டு இரண்டு கொலைகள் நடந்ததும் தெரியவந்தது. சுப்புராயன் – பத்மினி தம்பதிக்கு செந்தில்குமார், ராஜ்குமார் என்று இரண்டு மகன்கள். இவர்களுக்கு தன்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுத்துள்ளார் சுப்பராயன். இதில், ராஜ்குமாருக்கு அதிகமாக சொத்து போய் சேர்ந்துவிட்டதாக செந்தில்குமாருக்கு கோபம் இருந்தது. இதனால், சொந்த சகோதரர் ராஜ்குமாரையே செந்தில்குமார் கொலை செய்துள்ளார்.

அப்பா பெயரிலிருந்த சொத்துக்களை அடைய அவரையும் கொலை செய்திருக்கிறார். தற்போது மாமியார் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க முயன்றபோது மாட்டிக்கொண்டதாக” மேனகா கூறியுள்ளார்.
இதற்கிடையே செந்தில்குமாரை பல மாதங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது. டிரைவர் ராஜேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவரையும் மேனகா கொலை செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா தலைமறைவாக உள்ளார். அவர் சிக்கினால்தான் செந்தில் குமாருக்கு என்ன ஆனது என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
சொத்துக்காக பெண் ஒருவர் டி.வி சீரியல் வில்லிகள் போல கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.