×

திருமணமான 2 மாதத்தில் மனைவியை கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட கணவன்…தஞ்சாவூரில் நடந்த பயங்கரம்!

இதை தொடர்ந்து மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரின் மனைவி மாரியம்மாள். இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பாலு டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பாலுவின் மாரியம்மாள் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல்
 

இதை தொடர்ந்து மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்  பாலு. இவரின் மனைவி மாரியம்மாள். இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பாலு டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பாலுவின் மாரியம்மாள் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார்.  இதையறிந்த அக்கம் பக்கத்தினர்  இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாரியம்மாள்  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். 

அதே சமயம் மாரியம்மாளின்  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது  தெரியவந்தது. இதனால் போலீசார் கணவர் பாலுவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினையில் மனைவியைக் கொலை செய்ததாக பாலு ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது புதுமண தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல்  சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த பாலு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, கொலையை மறைக்க தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் கொல்லப்பட்டிருப்பதால்  இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.