×

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசம்…மூன்றாவது காதலனின் பெயரை பச்சை குத்தியதால் நடந்த விபரீதம்!

அதில் தனபால் என்பவருடன் திருமங்கைக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதேபகுதியைச் சேர்ந்த திருமங்கை என்பவரை கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமங்கை மோகனூரில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே புதூர் கிராமம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள
 

அதில் தனபால் என்பவருடன் திருமங்கைக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. 

நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதேபகுதியைச் சேர்ந்த திருமங்கை என்பவரை கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்த திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் திருமங்கை  மோகனூரில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால்  அவர் வெகுநேரமாகியும்  வீடு திரும்பவில்லை. 

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே   புதூர் கிராமம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள புதரில் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையில் இறங்கினர். அதில் தனபால் என்பவருடன் திருமங்கைக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. 

 இதை  தொடர்ந்து தனபாலை பிடித்து விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. திருமங்கை, தனபாலை  காதலித்து வந்துள்ளார். பின்பு வயதை  காரணம்  காட்டி அவரைவிட்டு விட்டு ரமேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் தனபாலுடன்  தொடர்ந்து  தொடர்பிலிருந்து வந்துள்ளார். அப்படி  சம்பவத்தன்று  கணவரிடம் பொய் சொல்லி விட்டு வந்து தனபாலுடன் தனிமையிலிருந்துள்ளார் திருமங்கை. அப்போது அவரின் கையில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தி இருந்ததை பார்த்த தனபால் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தனபால் துப்பட்டாவால் இறுக்கி திருமங்கையை கொலை செய்துவிட்டு பிணத்தை எடுத்து நண்பரின் காரில் வைத்து கொண்டு மூலனூர் பகுதியில் இருக்கும் சாலையில் பிணத்தை வீசி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து தனபால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் திருமங்கை உடலை வாங்க யாரும் வராததால், உடல் கோவை அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே  வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.