×

தியேட்டருக்கு சென்ற 5 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த 4 இளைஞர்கள் !

அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 இளைஞர்கள் அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் அவரது கணவனைப் பிரிந்து ஜெகன் என்பவருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டின் அருகே இருந்த தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 இளைஞர்கள் அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனால், அந்த
 

அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 இளைஞர்கள் அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் அவரது கணவனைப் பிரிந்து ஜெகன் என்பவருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டின் அருகே இருந்த தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி மற்றும் பிரபாகரன் ஆகிய 4 இளைஞர்கள் அந்த பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனால், அந்த பெண் அவர்களைச் செருப்பைக் காட்டி மிரட்டியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த அந்த 4 இளைஞர்களும் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இது குறித்து அந்த பெண் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.