×

தாயுடன் பட்டுசேலை, தாலியுடன் புகார் கொடுக்க வந்த இளம்பெண்: சேலத்தில் பரபரப்பு!

காதலன் மீது புகார் அளிக்க பட்டுசேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம்: காதலன் மீது புகார் அளிக்க பட்டுசேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனி சேர்ந்தவர் கௌரி. இவர் ஈரோடு மனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌரி நேற்று தாய் ஈஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு
 

காதலன் மீது புகார் அளிக்க பட்டுசேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்: காதலன் மீது புகார் அளிக்க பட்டுசேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனி சேர்ந்தவர் கௌரி. இவர்  ஈரோடு மனத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் லேப்  டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் கௌரி நேற்று தாய் ஈஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். அப்போது அவர் தாம்பூலத் தட்டில் பட்டு வேட்டி தாலி  ஆகியவற்றைக் கொண்டு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு  பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 

அப்போது போலீசாரிடம் கௌரி கூறியதாவது:- ‘ நானும் எனது ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதனால் நான் கர்ப்பமானேன். இதை அவரிடம் கூறிய போது, கருவை கலைத்து விட்டு வா திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அவர் கூறியபடி  கருவை கலைத்தேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.  அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதனை நம்பி நாங்கள் அங்காளம்மன் கோவிலில்  திருமணம் செய்ய ஏற்பாடு செய்தோம். அதற்காக பட்டுவேட்டி சேலை தாலி ஆகியவற்றை வாங்கினோம். ஆனால் திடிரென்று  அந்த வாலிபர் அவருடைய பெற்றோர் கூறியதைக் கேட்டு என்னை  திருமணம் செய்ய மறுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதனால் என்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.

 

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.