×

தவிடு பொடியாகும் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு… எடப்பாடி போட்ட அசத்தல் ப்ளான்..!

இவையெல்லாம் இன்னும் இரண்டே வாரத்துக்குள் நடக்குமாம். அதனால் பதவி பெற்றவர்கள் எல்லோரும் எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பது கணக்கு. உளவுத்துறையும் அதையே சொல்கிறது. அதிமுகவில் கோஷ்டி பூசல் அப்பட்டமாக தெரிய வந்துள்ளதால் கடும் அப்செட் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதிமுகவுக்குள் கலத்தை மூட்டி எம்.எல்.ஏக்களை இழுந்து ஆட்சியை கைப்பற்றலாம் என வியூகம் அமைத்து வந்தார் மு.க.ஸ்டாலின். இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி இப்போது புது கணக்கு ஒன்றை போட்டு
 

இவையெல்லாம் இன்னும் இரண்டே வாரத்துக்குள் நடக்குமாம். அதனால் பதவி பெற்றவர்கள் எல்லோரும் எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பது கணக்கு. உளவுத்துறையும் அதையே சொல்கிறது.

அதிமுகவில் கோஷ்டி பூசல் அப்பட்டமாக தெரிய வந்துள்ளதால் கடும் அப்செட் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  அதிமுகவுக்குள் கலத்தை மூட்டி எம்.எல்.ஏக்களை இழுந்து ஆட்சியை கைப்பற்றலாம் என வியூகம் அமைத்து வந்தார் மு.க.ஸ்டாலின். இதனை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி இப்போது  புது கணக்கு ஒன்றை போட்டு இருக்கிறார். 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாணியில் ஒரு மண்டலத்துக்கும் மக்கள் தொகை அதிகம் உள்ள சமுதாயத்துக்கும் அமைச்சர் சீட்டு கொடுத்து சமாளிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.  அத்தோடு பொதுக்குழுவில் எந்த சமுதாயத்தினர் அதிகம் இருக்கிறார்களோ அவர்களுக்கு இரண்டு அமைச்சர் தர முடிவு செய்து இருக்கிறார்.  மற்ற சமுதாயத்தினருக்கு வாரியம் தரவும் திட்டம் போட்டிருக்கிறார்கள்.  

இவையெல்லாம் இன்னும்  இரண்டே வாரத்துக்குள் நடக்குமாம். அதனால் பதவி பெற்றவர்கள் எல்லோரும் எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக  இருப்பார்கள் என்பது கணக்கு. உளவுத்துறையும் அதையே சொல்கிறது.

எடப்பாடி பழனிசாமி, தனது வலது கரம் இடது கரம் என்று நான்கு பேரை வைத்துள்ளார். அவர்கள் மூலமாகவே காய்களை நகர்த்தி வர்றார். அவர்கள் தான் அதிருப்தி எம்எல்ஏ, அமைச்சர்களை சந்தித்து பேசு வருகிறார்கள்.  பின்னர் அங்கிருந்தே செல்போன் மூலம் முதல்வரிடம் பேச வைத்து பணிய வைக்கிறார்கள். 

அதே பாணியை ஓ.பி.எஸ்  கடைபிடித்தாலும் பதவி கொடுக்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லாதால் அடிமட்ட தொண்டர்களிடமும், பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் பக்கம் சேர்க்கும் பணியை ரத்த உறவு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார் என்கிறார்கள்.