×

தற்கொலை செய்ய முயன்ற மனைவி.. தகவல் அறிந்த கணவனும் தற்கொலை முயற்சி : வேலூரில் பரபரப்பு!

இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேதவல்லி என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தீபக்(24). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேதவல்லி என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதிலிருந்து இவர்கள் இரண்டு பேருக்கும் எந்த வித சண்டையும் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல தீபக்கை வேலைக்கு
 

இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேதவல்லி என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தீபக்(24). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேதவல்லி என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதிலிருந்து இவர்கள் இரண்டு பேருக்கும் எந்த வித சண்டையும் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு வேதவல்லி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் பொருத்தப் பட்டிருந்த அலாரம் சத்தம் கேட்டுள்ளது. 

அதனைக் கேட்ட வேதவல்லியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வேதவல்லி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து வேதவல்லியின் பெற்றோர் தீபக்கிற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த உடனே, மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த தீபக் என்ன செய்வதென்று அறியாது, தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

 இதனையறிந்த பொதுமக்கள் தீபக்கை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வேதவல்லிக்கு வயிற்றில் நீர்க்கட்டி இருந்ததாகவும் அந்த வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது.