×

தமிழகத்தில் மேலும் 66பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 97ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1685 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28லட்சத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 97ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1685 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1821ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என தெரிவித்தார்.