×

தனியாக இருந்த மூதாட்டிக்கு 16வயது சிறுவனால் நடந்த பயங்கரம்!

சிறுவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேல்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 65 வயதான இவர் கடந்த 30 ஆம் தேதி வீட்டில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட
 

சிறுவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேல்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  பொன்னம்மாள். 65 வயதான இவர் கடந்த 30 ஆம் தேதி வீட்டில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி மூதாட்டி  பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 

இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியை அடித்து கொன்று அதே பகுதியைச்  சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம்  நடத்திய விசாரணையில், மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 16 வயதான அந்த  சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.  மூதாட்டி பள்ளி அருகே தோட்டத்தில் விளையும் பழங்களை விற்று வந்துள்ளார்.

அந்த வகையில் சிறுவன் வெளிநாட்டுப் பணத்தை கொடுத்து பொன்னம்மாளிடம் பழங்கள் வாங்கியுள்ளான். அடுத்த நாள் அந்த பணம் செல்லாது என்று கூறி மூதாட்டி சிறுவனிடம் தகராறுசெய்ய அந்த சிறுவனும் கையிலிருந்த பணத்தை பொன்னம்மாளிடம் கொடுத்துள்ளான். வகையில் பணம் இல்லை என்பதால் வீட்டில் செலவுக்கு பணம் சேர்க்க அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த சிறுவன் பொன்னம்மாளிடம் நிறைய பணம் இருக்கிறது. அவர் வீட்டில் திருடலாம் என முடிவு செய்து  வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது பொன்னம்மாள் சிறுவனை பார்த்துவிடவே டார்ச் லைட்டால் அவரை எடுத்துவிட்டு அங்கிருந்த செல்ஃபோன் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு சிறுவன் தப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து செல்போன் என்னை வைத்து போலீசார் விசாரணை  நடத்தியதில், சிறுவனின் தாய் அந்த செல்ஃபோனை பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.