×

தனிமையில் இருந்ததை பார்த்துவிட்ட மகன்…கழுத்தை நெரித்து கொன்ற தாய்; வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

ராம்குமார் மனைவியின் பதிலில் சந்தேகம் அடைந்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.குச்சம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவியும், ஜீவா என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் ராம்குமார் கூலி வேலை செய்தும், ஆனந்த ஜோதி ஒரு கடையில் வேலைபார்த்தும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மகன் ஜீவா பேச்சு மூச்சின்றி கிடப்பதாக ஆனந்தஜோதி
 

ராம்குமார் மனைவியின்  பதிலில் சந்தேகம் அடைந்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.குச்சம்பட்டியை சேர்ந்தவர்  ராம்குமார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவியும், ஜீவா என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.  திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் ராம்குமார் கூலி வேலை செய்தும், ஆனந்த ஜோதி ஒரு கடையில் வேலைபார்த்தும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மகன் ஜீவா பேச்சு மூச்சின்றி கிடப்பதாக ஆனந்தஜோதி கணவருக்கு தகவல்  கூற, மகனை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர். ஆனால்  சிறுவன் இறந்து பலமணிநேரம் ஆகியிருப்பதாக மருத்துவர்கள் கூறியதோடு, கழுத்து இறுக்கப்பட்டு நக கீறல்கள் இருப்பதாக கூறி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மனைவியிடம் விசாரித்த ராம்குமார் மனைவியின்  பதிலில் சந்தேகம் அடைந்து, போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்த ஜோதியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதில்,எனக்கும்  கணவரின் உறவினர் மருதுபாண்டிக்கும் பழக்கம் இருந்தது. கணவர் இல்லாத நேரங்களில் அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் தனியாக இருப்பதை  என் மகன் ஜீவா பார்த்து விட்டான். இதனால் அவன் கணவர் ராம்குமாரிடம் கூறிவிடுவார் என்று பயந்து, நானும் மருதுபாண்டியும் இணைந்து ஜீவாவை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில்  ஆனந்தஜோதி,மருதுபாண்டி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.