×

தந்தையைக் கொலைச் செய்த மகனும், மகளும்!  வீட்டில் புதைத்த மனைவி!

தமிழகத்தில் முறையற்ற உறவுகளால் சமூக கட்டமைப்பே கேள்விக்குறியாக உள்ளது. விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவரைக் மாதக்கணக்கில் காணவில்லை என்று அவரது சகோதரர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தங்களது தந்தை வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருப்பதாக அவரது மகனும், மகளும் தெரிவித்தனர். தமிழகத்தில் முறையற்ற உறவுகளால் சமூக கட்டமைப்பே கேள்விக்குறியாக உள்ளது. விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவரைக் மாதக்கணக்கில் காணவில்லை என்று அவரது சகோதரர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தங்களது தந்தை
 

தமிழகத்தில் முறையற்ற உறவுகளால் சமூக கட்டமைப்பே கேள்விக்குறியாக உள்ளது. விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவரைக் மாதக்கணக்கில் காணவில்லை என்று அவரது சகோதரர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தங்களது தந்தை வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருப்பதாக அவரது மகனும், மகளும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் முறையற்ற உறவுகளால் சமூக கட்டமைப்பே கேள்விக்குறியாக உள்ளது. விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(55). இவரைக் மாதக்கணக்கில் காணவில்லை என்று அவரது சகோதரர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது தங்களது தந்தை வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருப்பதாக அவரது மகனும், மகளும் தெரிவித்தனர்.

தங்களது சகோதரர் மாதக்கணக்கில் தகவலே இல்லாமல் இருக்கிறாரே என்று சந்தேகமடைந்த சுப்புராஜுன் சகோதரர்கள், இது குறித்து சந்தேகமடைந்து அவரது மனைவி, மகன், மகள் மீது  சாத்தூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  வீட்டிற்கு சென்றிருந்த போது , வீட்டின் பின்புறத்தில் தலைமுடி, எலும்புகள் இருந்ததாகவும் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அப்பகுதியைத் தோண்டியதில் சில எலும்புகள் கிடைத்துள்ளன. பின்னர், சுப்புராஜ் குடும்பத்தினரிடம் விசாரித்ததில், சுப்புராஜை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். சுப்புராஜுன் மனைவி பிச்சையம்மாளுக்கும் மகன் சுரேஷுக்கும் இடையே தகாத உறவு இருந்ததை கண்டுபிடித்து சுப்புராஜ் கண்டித்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த தாயும், மகனும் அன்றைய தினத்தின் இரவில் மது அருந்திவிட்டு சுப்புராஜ் வீட்டிற்கு வந்தவுடன், அவரை கொலை செய்து, உடலை எரித்து மூன்று மாதத்துக்கு முன்னா் புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மனைவி பிச்சையம்மாள், மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகிய மூவரையும் கைது செய்தனர். அந்த பகுதியில் இது பற்றி தெரிந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சுரேஷை தாக்க முற்பட்டனர். தற்போது கொலை வழக்கில் மூவரும் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.