×

தகாத உறவுக்கு இடையூறு.. பெற்ற குழந்தையைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த பேராசிரியர்!?

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தையின் சடலத்தை மீட்டனர். பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், 5 மற்றும் 2 மவயது முறையே தனுஷ்காஸ்ரீ, மேகனாஸ்ரீ என இரு மகள்களும் உள்ளனர். சரவணனும், அன்பரசியும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இவர்களின் வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது
 

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும்,  5 மற்றும் 2 மவயது முறையே தனுஷ்காஸ்ரீ,  மேகனாஸ்ரீ என இரு மகள்களும் உள்ளனர். சரவணனும், அன்பரசியும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்களின் வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அன்பரசியும் மேகனாஸ்ரீயும்  கிணற்றில் தத்தளித்து வந்துள்ளனர். அன்பரசி உயிருடன் மீட்கப்பட மேகனாஸ்ரீயை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டுமே பெண் குழந்தைகள் என்பதால் கணவன் வீட்டில் அன்பரசியை கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் சரவணனுக்கு கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு  இருந்துள்ளது. இதனால் செல்போனில் கொஞ்சி பேசியும் வாட்ஸ்அப்பிலும் உறவை வளர்த்து  வந்துள்ளார். ஆனால் கள்ளக்காதலுக்கு மனைவி  இடையூறாக இருந்ததால் அவரை கொல்ல  திட்டமிட்டுள்ளார். அப்போது குடிபோதையில் சரவணன் இருந்ததால்  குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் அவரது குடும்பத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.