×

டெல்லி – சென்னை விமானத்தில் இயந்திரக் கோளாறு ! 112 பேரின் கதி?

டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஏா் ஏசியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி – சென்னை ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 107 பயணிகள், 5 ஊழியர்கள் என 112 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட விமானி சமயோசிதமாக செயல்பட்டு சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார் . சென்னை
 

டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஏா் ஏசியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி – சென்னை ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 107 பயணிகள், 5 ஊழியர்கள் என 112 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது  விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட விமானி சமயோசிதமாக செயல்பட்டு சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்

.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடம் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். பின்னர் விமான தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் ஆலோசனையின்படி செயல்பட்ட விமானி, பத்திரமாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.இதனால் விமானத்தில் பயணித்த 107 பயணிகள், ஐந்து விமான ஊழியா்கள் உட்பட 112 அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் கொஞ்ச நேரம் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் பிரச்சனை ஏதும் இல்லை என தெரிந்த பிறகுதான் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.