×

ஜெயிலில் மணமகன்…இன்று திருமணம்; மணமகளால் நீதிபதி எடுத்த அதிரடி முடிவு!

பதுக்கி வைத்திருந்ததாகக் கைதாகி கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த 24 ஆம் தேதி மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததாகக் கைதாகி கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு இன்று (ஜனவரி 30 திருமணம் நடக்க உள்ளதால், ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது. அந்த மனுவை நேற்று விசாரித்த
 

பதுக்கி வைத்திருந்ததாகக் கைதாகி கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கடந்த 24 ஆம் தேதி மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததாகக் கைதாகி கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், தனக்கு இன்று (ஜனவரி 30  திருமணம் நடக்க உள்ளதால், ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தாக்கல்செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது.  அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  வெங்கடேஷ ன் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிடம்  பேசியதில், அவருக்கு சம்மதம் என தெரியவந்துள்ளது. இந்த திருமணம் அவரது வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறேன். அதனால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்’ என்று கூறினார்.

பொதுவாக மாலை  6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரும் வெளியில் விடப்படுவதில்லை. இருப்பினும் இந்த வழக்கில் வெங்கடேஷனுக்கு விலக்கு  அளித்து உடனடியாக விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.