×

சொத்தில் பங்கு கேட்டு டார்ச்சர் செய்த கணவன் : தற்கொலை செய்து கொண்ட மனைவி !

இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் ஹஜிரா பானுவின் பெற்றோர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாட்ஷா(30) வடபழனியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹஜிரா பானு(25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்ததில் இருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இவர்கள் வசிக்கும்
 

இவர்கள் வசிக்கும் அதே பகுதியில்  ஹஜிரா பானுவின் பெற்றோர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. 

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாட்ஷா(30) வடபழனியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹஜிரா பானு(25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்ததில் இருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இவர்கள் வசிக்கும் அதே பகுதியில்  ஹஜிரா பானுவின் பெற்றோர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. 

அந்த வீட்டில் பங்கு கேட்டு  ஹஜிரா பானுவை, அஸ்லாம் பாட்ஷா வெகு காலமாக டார்ச்சல் செய்து வந்துள்ளார்.  கடந்த 25 ஆம் தேதி இவர்களுக்கிடையே மீண்டும் சொத்து தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பானு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். உடனே பானுவை மீட்ட அஸ்லாம் பாட்ஷா அவர்கள் வீட்டின் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கிருந்து பானுவை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பானுவிற்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களின் 5 வயது பெண் குழந்தையின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.