×

செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி தொல்லை செய்த போலீஸ்! விசாரணைக்கு சென்ற பெண் மரணம்…

செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி தொல்லை செய்த போலீஸ்! விசாரணைக்கு சென்ற பெண் மரணம்… வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் கொலை வழக்கில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தில் உள்ள ராமசாமி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா… இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடந்த 9ஆம் தேதி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்தனர். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி
 

செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி தொல்லை செய்த போலீஸ்! விசாரணைக்கு சென்ற பெண் மரணம்…

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் கொலை வழக்கில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தில் உள்ள ராமசாமி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா… இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடந்த 9ஆம் தேதி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்தனர். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்திராணியின் உடல் சடலமாக ரயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளது. அவர் ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட நிர்மலாவை தான் தான் ஆள்வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி போலீசார் வற்புறுத்தியதாகவும், அதனால் மன ஊளைச்சலுக்கு ஆளான இந்திராணி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மகன் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.