×

சென்னையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்திவருபவர் வீட்டில் ஐடி ரெய்டு..!

இயக்குநர்கள் 4 பேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் அக்கல்வியின் இயக்குநர்கள் 4 பேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. கடந்த 10 தேதி முதல் நடைபெற்று வரும் அந்த சோதனையின் கடைசி நாளான இன்று பள்ளியின் கலையரங்கத்தினுள் பதுக்கி வைத்திருந்த 30 கோடி ரூபாய் பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
 

இயக்குநர்கள் 4 பேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மற்றும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் அக்கல்வியின் இயக்குநர்கள் 4 பேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. கடந்த 10 தேதி முதல் நடைபெற்று வரும் அந்த சோதனையின் கடைசி நாளான இன்று பள்ளியின் கலையரங்கத்தினுள் பதுக்கி வைத்திருந்த  30 கோடி ரூபாய் பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். 

மேலும், கிரீன் பார்க் பள்ளி நிறுவனத்தில் சுமார் 150 கோடி வரி ஏய்ப்பு நடந்தது சோதனையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் நீட் பயிற்சி நடத்திவரும் நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியின் கரஸ்பாண்டெண்ட் சரவணனின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.