சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு முதலே தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.