×

சூதாட்ட பிரச்னை! விசாரணை வளையத்துக்குள் ராதிகா சரத்குமாரின் மருமகன்… 

கிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக கிரிக்கெட் லீக் போட்டியில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, 4 வீரர்கள் உள்பட 8 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்
 

கிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் வீரரும் பிரபல நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யூ மிதுன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கர்நாடக கிரிக்கெட் லீக் போட்டியில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, 4 வீரர்கள் உள்பட 8 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பிரபல நடிகையின் மருமகனும், சிவமோகா அணியின் கேப்டனுமாக இருந்த அபிமன்யுமிதுனுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பெட்டிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் அவர் இந்திய சர்வதேச அணிக்காக விளையாடி இருப்பதால் பிசிசிஐயிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அபிமன்யூ கைது செய்யப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூதாட்டம் குறித்து சர்வதேச இந்திய அணியில் விளையாடிய வீரர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிப்பது இதுவே முதல்  முறையாகும்.