சுங்கச்சாவடியை தூக்கிவீசி தறிகெட்டு ஓடிய லாரி! இருவர் பலி!!
கிருஷ்ணகிரியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, சுங்கச்சாவடியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் வழங்கம்போல் அப்பகுதி வழியே வரும் வாகனங்களிடம் சுங்கவரி கட்டணம் வசூல் செய்துக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்துக்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.