×

சீரியலில் மூழ்கிய பெண்…வீடு எரிவது தெரியாமல் உள்ளே நுழைந்ததால் உடல் கருகி பலி!

வீட்டில் டிவி இல்லாததால், பக்கத்து வீட்டில் டிவியில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி. 43 வயதான இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது இரண்டு மகன்களும் லட்சுமியின் கணவருடன் வசித்து வருகிறார்கள். லேமினேஷன் கடையில் வேலை பார்த்துவந்த லட்சுமி வீடு திரும்பியதும் வீட்டில் டிவி இல்லாததால், பக்கத்து வீட்டில் டிவியில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று
 

வீட்டில் டிவி இல்லாததால்,  பக்கத்து வீட்டில்  டிவியில் சீரியல்  பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 

மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி. 43 வயதான இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது இரண்டு மகன்களும் லட்சுமியின் கணவருடன் வசித்து வருகிறார்கள். லேமினேஷன் கடையில் வேலை பார்த்துவந்த லட்சுமி வீடு திரும்பியதும் வீட்டில் டிவி இல்லாததால்,  பக்கத்து வீட்டில்  டிவியில் சீரியல்  பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 

இந்நிலையில்  நேற்று மாலை வழக்கம் போல் பக்கத்து வீட்டில் அமர்ந்துகொண்டு டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது  வீட்டிலிருந்து புகை வருவதை கண்ட சிலர் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் வீட்டுக்கு ஓடிய லட்சுமி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது புகை மண்டலத்திற்குள் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் லட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது  அவர் உடல் கருகிய நிலையில்  உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  கீரைத்துறை போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.