×

சிறுமியை கட்டிபோட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரம்: விழுப்புரத்தில் பரபரப்பு!

சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 15 வயதான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வீட்டினுள் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 

சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 15 வயதான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வீட்டினுள் இருந்து புகை வந்துள்ளது.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜெயஸ்ரீ, விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் தன்னை கட்டிப்போட்டு முருகன், கலியபெருமாள் ஆகிய இரண்டு பேரும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும் முருகன், கலியபெருமாள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. முருகன், கலியபெருமாள் இருவரும் ஜெயஸ்ரீயின் சகோதரனை தாக்கியுள்ளனர். இதனால் அவரை  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுவிட்டு போலீசில் புகார் கொடுக்க ஜெயஸ்ரீயின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.