×

சிறுக சிறுக பேரன்களுக்காகச் சேர்த்து வைத்த பணம் செல்லாதா? : 46 ஆயிரம் பணத்தோடு பாட்டிகள் வேதனை!

இவர்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் இவர்களின் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75) மற்றும் தங்கம்மாள்(78) தங்களது பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்துள்ளனர். இரண்டு பாட்டிகளின் கணவர்களும் இறந்த நிலையில், தங்களின் மகன்கள் வீட்டில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் இவர்களின் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்குப் பணம் அதிகமாகத் தேவைப் படுவதால், அவர்களின் மகன்களிடம் இல்லாத சூழ்நிலையில் அந்த
 

இவர்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் இவர்களின் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள்(75) மற்றும் தங்கம்மாள்(78) தங்களது பேரன் பேத்திகளுக்காகப் பணம் சேகரித்து வைத்து வந்துள்ளனர். இரண்டு பாட்டிகளின் கணவர்களும் இறந்த நிலையில், தங்களின் மகன்கள் வீட்டில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் இவர்களின் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்குப் பணம் அதிகமாகத் தேவைப் படுவதால், அவர்களின் மகன்களிடம் இல்லாத சூழ்நிலையில் அந்த பாட்டிகளிடம் கேட்டுள்ளனர். 

நாங்கள் நிறையப் பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்று கூறி அந்த பாட்டிகள் மொத்தமாக 46 ஆயிரம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

அந்த பணம் முழுவதுமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இந்த பணம் செல்லாது. இதனை எப்போதோ மாற்றி விட்டார்கள் என்று கூறியுள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டிகள் பணம் செல்லாமல் அறிவிக்கப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்றும் இந்த பணத்தைப் பல ஆண்டுகளாகப் பேரன், பேத்திகளுக்குக் கொடுப்பதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்தோம் என்று வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.