×

சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவி!

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ வைரஸால் அரசின் புள்ளிவிவரப்படி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 490க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ கண்காணிக்கப்படுகிறார்கள்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையை பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா
 

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ வைரஸால் அரசின் புள்ளிவிவரப்படி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 490க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ கண்காணிக்கப்படுகிறார்கள்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையை பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். 

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனவர். அவர்கள் தினசரி வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவியை பெப்சி அமைப்பிடம் வழங்கினார்.