×

சாதியால் ஏற்பட்ட தகராறு: சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட ஜோடி கடத்தல்!

வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வனும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. இதையடுத்து நேற்று சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும்
 

 வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு  இருந்துள்ளது.  

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வனும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி  என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இவர்கள்  வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு  இருந்துள்ளது.  

இதையடுத்து நேற்று  சேலம் மாவட்டம் காவலாண்டியூரில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை  திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்தவர்களைத் தாக்கினர். செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அடித்து காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். 

 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட  நிலையில் போலீசார் செல்வனை மீட்டனர். தொடர்ந்து இளமதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காதல் ஜோடியை கடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என   திராவிடர் விடுதலை கழகத்தினர் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.