×

கொரோனாவை கட்டுப்படுத்த இயலாத மோடி உடனடியாக பதவி விலகவேண்டும் – திருமாவளவன்

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் குரல் கொடுக்கும் இரண்டாவது அலை. கடுமையாக மக்களை தாக்கி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாயிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை
 

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் குரல் கொடுக்கும் இரண்டாவது அலை. கடுமையாக மக்களை தாக்கி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காரணமாயிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும்.

முதல் அறையை விட தற்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்திய மக்களுக்கு முறையாக போட்டி இருந்தால் அந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மாறாக தடுப்பூசிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பை பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதிலேயே மோடி கவனமாக இருந்தார்.

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் குழுக்கள் கண்டறியப்படும் இந்த சூழலிலும் கூட மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மாநில அரசுகள் சுயேச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என உருவாக்கப்பட்ட பிஎம்ஜிகேபி இன்சூரன்ஸ் திட்டத்தையும் மோடி அரசு கடந்த மார்ச் 24 ஆம் தேதி ரத்து செய்துவிட்டது. மோடி அரசு எந்த அளவுக்கு மக்களின் உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். கொரோனாவை எதிர் கொள்வதில் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் பிரதமர் மோடிக்கு இல்லை என்பதற்கு கடந்த ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் எடுத்த முடிவு ஒரு சான்றாகும்.

மக்களின் உயிர் மீது எந்த அக்கறையும் இல்லாமல் நாட்டை கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மோடி, பிரதமர் பதவியில் இருந்து நீடிப்பது இன்னும் பேர் ஆபத்தையே கொண்டுவரும். எனவே அவர் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.