×

கொரோனா தொற்று பரவுவதற்கு காரணம் திமுக தான் – அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி
 

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனாவில் நோய்த் தொற்று இருப்பதை அறிந்தவுடன், ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரிசோதனைக் கருவிகள், உடல் கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மார்ச் 16ஆம் தேதியில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் விளக்கம் தந்தார்.பேரவைக்கு வந்தால் கொரோனா பரவும்; வெளியே சென்றால் கொரோனா பரவாது; இது தான் ஸ்டாலினின் பாணி. நோய்த் தொற்று பரவ திமுக தான் காரணமாக இருந்துள்ளது. எல்லா இடர்பாடுகளையும் சமாளித்த அரசு அம்மாவின் அரசு. 2571 வெண்டிலேட்டர்கள் உள்ளன. இன்னும் ஆர்டர் செய்திருக்கிறோம்.  5 லட்சம் ரேபிட் கிட்கள் வாங்க கொள்முதல் ஆணை கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாத் துறைகளும் சம்பந்தப்பட்டதாலேயே தலைமை செயலாளர் பேட்டியளிக்கிறார்

சட்டபேரவையில் கொரோனா பரவும் என்ற மு க ஸ்டாலின் அன்றையே தினமே 1000 பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். வைரஸ் தடுப்பு தொடர்பாக 7 முறை உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களே முதலமைச்சர் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள்.அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. அரசை கலைக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போன நிலையில் தற்போது உளறிக்கொண்டிருக்கிறார். உண்மை அறியாமல் துண்டு சீட்டை நம்பியே இருப்பவர் ஸ்டாலின்” எனக் கூறினார்.

யே ஸ்டாலின் பேசக்கூடாது