×

குளத்தில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள்…சோகத்தில் கிராம மக்கள்!

இந்த கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்தி என்னும் பகுதிக்கு அருகே உள்ளது வடக்கு புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் குளிப்பதற்காக அந்த குளத்திற்குச் சென்றுள்ளனர். வெகு நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினருடன்
 

இந்த கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்தி என்னும் பகுதிக்கு அருகே உள்ளது வடக்கு புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் குளிப்பதற்காக அந்த குளத்திற்குச் சென்றுள்ளனர். வெகு நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினருடன் அந்த குளத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். 

குளத்தின் அருகே சிறுவர்களின் ஆடை இருந்ததால் குளத்தில் இறங்கித் தேடிப் பார்த்துள்ளனர். அதில் 3 சிறுவர்களின் உடலும் சடலமாகக் கிடந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுவர்கள் குளிப்பதற்காக இறங்கி, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.