×

கிணற்றில் கேட்ட முனகல் சத்தம்.. எட்டிப் பார்த்து அலறிப்போன மாமியார் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அவர்கள் வீட்டில் அருகில் இருந்த கிணறு ஒன்றில் முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு பதற்றம் அடைந்த கலைச்செல்வி பொறுமையாகச் சென்று கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள மூலசெங்காடு என்னும் பகுதியில் இளையராஜா- திவ்யா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்ஷிகா(3), ஹன்சிகா(1) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் இருந்த திவ்யாவைக் காணவில்லை என்று இளையராஜாவின் தாயார் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர்கள் வீட்டில் அருகில்
 

அவர்கள் வீட்டில் அருகில் இருந்த கிணறு ஒன்றில் முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு பதற்றம் அடைந்த கலைச்செல்வி பொறுமையாகச் சென்று கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

சேலம் மாவட்டம்  தம்மம்பட்டி அருகே உள்ள மூலசெங்காடு என்னும் பகுதியில் இளையராஜா- திவ்யா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தன்ஷிகா(3), ஹன்சிகா(1) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் இருந்த திவ்யாவைக் காணவில்லை என்று இளையராஜாவின் தாயார் தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர்கள் வீட்டில் அருகில் இருந்த கிணறு ஒன்றில் முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு பதற்றம் அடைந்த கலைச்செல்வி பொறுமையாகச் சென்று கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது அவரது மருமகள் இரண்டு பேத்திகளும் உயிருக்குப் போராடிய நிலையில் கிணற்றில் விழுந்து கிடந்துள்ளனர். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனே அவரது மகனுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் கொடுக்க, இளையராஜா ஓடி  வந்து அவர்கள் அனைவரையும் மேலே தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப்  பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பெண் குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், திவ்யா மட்டும் முதுகெலும்பு உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது திவ்யா அவரது மகள் தன்ஷிகாவை அடித்ததால், கலைச்செல்வி அவரை திட்டியதாகவும் அந்த ஆத்திரத்தில் தான் திவ்யா குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.