×

கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 4 பேர் பரிதாப பலி!

கடலூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் தாறுமாறாக வந்த லாரி மோதியதில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த கரும்பு ஜூஸ் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்
 

கடலூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் தாறுமாறாக வந்த லாரி மோதியதில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த கரும்பு ஜூஸ் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேருக்கு நேர் வந்து கொண்டிருந்த காரும் மீன் லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதியதாக கூறபபடுகிறது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பெண்களும், லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் கஉடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.