×

காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்ட காதலன் ! மாடியில் இருந்து குதித்து மரண வாசலுக்குள் நுழைந்த பரிதாபம் !

சென்னையில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்தவர் தப்பிக்க முயற்சித்தபோது எமன் பாசக்கயிறை போட்டு அழைத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவை சேர்ந்த கூலித்தொழிலாளியான நாராயணன் சென்னை எருக்கஞ்சேரியில் வசித்து வந்துள்ளார். தண்டையார்பேட்டையில் பணிபுரிந்த அவருக்கும் அப்பகுதியில் மாலா என்ற திருமணம் ஆன பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து மாலா வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் நாராயணன். சென்னையில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்தவர் தப்பிக்க முயற்சித்தபோது எமன் பாசக்கயிறை போட்டு அழைத்து சென்ற சம்பவம்
 

சென்னையில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்தவர் தப்பிக்க முயற்சித்தபோது எமன் பாசக்கயிறை போட்டு அழைத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த கூலித்தொழிலாளியான நாராயணன் சென்னை எருக்கஞ்சேரியில் வசித்து வந்துள்ளார். தண்டையார்பேட்டையில் பணிபுரிந்த அவருக்கும் அப்பகுதியில் மாலா என்ற திருமணம் ஆன பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து மாலா வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் நாராயணன்.

சென்னையில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்தவர் தப்பிக்க முயற்சித்தபோது எமன் பாசக்கயிறை போட்டு அழைத்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த கூலித்தொழிலாளியான நாராயணன் சென்னை எருக்கஞ்சேரியில் வசித்து வந்துள்ளார். தண்டையார்பேட்டையில் பணிபுரிந்த அவருக்கும் அப்பகுதியில் மாலா என்ற திருமணம் ஆன பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து மாலா வீட்டிற்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் நாராயணன். இந்நிலையில் மனைவி மாலா மீது சந்தேகம் அடைந்த அவரது கணவர் திலகர் வீட்டில் ரகசியமாக கேமரா பொருத்தி உள்ளார். இதையடுத்து நாராயணன் அடிக்கடி வீட்டிற்கு வந்து போவதை உறுதி செய்தார்.

இதையடுத்த கடந்த வாரம் மாலா வீட்டிற்கு வழக்கம்போல் வந்த நாராயணனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார் திலகர். நாராயணன் வீட்டிற்குள் வந்தவுடன் அவரை பிடிக்க திலகரும், அவரது உறவினர்களும் முயற்சி செய்தபோது நிர்வாணக் கோலத்திலேயே மாடிக்கு ஓடினார். பின்னர் அங்கிருந்து தப்ப முடியாது என்பதால் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் மாடியில் இருந்து குதித்த நாராயணன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.கே. நகர் போலிஸ் நராயணன் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். திருமண பந்தத்தை மீறிய உறவால் ஒரு பக்கம் மாலாவின் குடும்பம் சீரழிந்துள்ளது. மற்றொரு பக்கம் நாராயணனின் குடும்பம் அவரை தொலைத்து விட்டு நடுத்தெருவிற்கு வந்துள்ளது. தான் செய்வது தவறில்லை என்று நினைக்கும் வரை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நம்மை பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை உணரவேண்டும்.